வவுனியாவிலிருந்து வேல் தாங்கியவாறு நல்லூருக்கு பாத யாத்திரை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
வேப்பங்குளம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து சாமி அம்மா தலைமையில் ஆரம்பமான இந்தப் பாத யாத்திரை ஒன்பதாவது வருடமாகத் தொடர்நது இடம்பெறுகின்றது.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை வழியே வரும் இந்தப் பாத யாத்திரை வரும் வழியில் உள்ள ஆலயங்களைத் தரிசித்தும் தங்கியும் எதிர்வரும் 29 ஆம் திகதி நல்லூர் கந்தன் ஆலயத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.